மாயாவதியை விலைமாதுவோடு ஒப்பிட்டு பேசிய உ.பி. பாஜக தலைவரால் சர்ச்சை
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியை, விலைமாதுவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் அம்மாநில பாஜக, துணை தலைவர் தயாசங்கர் சிங்.
பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில்தான் இவ்வாறு கூறி ஷாக் கொடுத்துள்ளார் அவர். "விலைமாதுக்கள் கூட கஸ்டமர்கள் பணம் கொடுத்தால் அவர்களை திருப்திபடுத்துவார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தின் முக்கிய தலைவரான மாயாவதியோ, கட்சி சீட்டை விற்பனை செய்து வருகிறார்.

ஒருவர் ரூ.1 கோடி கொடுத்தால் அவருக்கு போட்டியிட சீட் தருவதாக கூறுவார், இன்னொருவர் ரூ.2 கோடி கொடுத்தால் அவருக்கு சீட் கொடுத்துவிடுவார்" என்று தயாசங்கர் சிங் தெரிவித்தார்.
தலித் சமூகத்து தலைவராக உள்ள, மாயாவதியை இவ்வளவு மோசமாக பாஜக மாநில துணை தலைவர் பேசியது அக்கட்சி தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications