மகாராஷ்டிராவில் 31 தொகுதிகளைக் கைப்பற்றி விஸ்வரூப வெற்றி பெறுமாம் பாஜக அணி- கருத்து கணிப்பு
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தின் 48 தொகுதிகளில் 31 இடங்களை பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி கைப்பற்றி விஸ்வரூப வெற்றி பெறும் என்று ஏ.பி.பி.-நீல்சன் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தலையொட்டி ஏ.பி.பி நியூஸ் மற்றும் நீல்சன் குழுமம் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 31 தொகுதியை பாஜக கூட்டணி கைப்பற்றுமாம்.
பாஜக அணிக்கு 31 தொகுதிகள்..
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த அணிக்கு மொத்தம் 31 தொகுதிகள் கிடைக்கக் கூடுமாம்.
பாஜகவுக்கு 19- சிவசேனாவுக்கு 12
பாரதிய ஜனதா கட்சி மட்டும் 19 தொகுதிகளிலும் சிவசேனா 12 தொகுதிகளிலும் வெல்லுமாம்.
காங்கிரஸ் அணிக்கு. 13..
காங்கிரஸ்- தேசியவாத கூட்டணிக்கு 13 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு. இதில் காங்கிரஸ் கட்சி 8, தேசியவாத கட்சி 5 இடங்களைக் கைப்பற்றுமாம். 2009 தேர்தலில் காங்கிரஸ் அணி 17 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.என்.எஸ்.க்கு ஒரு தொகுதி..
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுக்கு ஒரே ஒரு தொகுதி கிடைக்கலாம் என்கிறது கணிப்பு.
ஆம் ஆத்மிக்கு முட்டை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்கிறது ஏ.பி.பி.- நீல்சன் கருத்து கணிப்பு