ஜே.என்.யூவில் ஆணுறை... வில்லங்கமாக பேசிய பாஜக எம்.எல்.ஏ விடம் விளக்கம் கேட்கும் அமித் ஷா
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பற்றி தரக்குறைவாக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜாவின் பேச்சு பாஜக தலைவர் அமித் ஷாவை கோபம் அடைய வைத்துள்ளது. அவரை டெல்லிக்கு வருமாறு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜா டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் மாணவர்கள் பற்றி கூறுகையில்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 3 ஆயிரம் பீர் கேன்கள், பாட்டில்கள் கிடக்கும். யார் பீர் குடிக்கிறார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 10 ஆயிரம் சிகரெட் துண்டுகள், 4 ஆயிரம் பீடித் துண்டுகள் கிடக்கின்றன. இது தவிர 50 ஆயிரம் எலும்புகள் வேறு கிடக்கின்றன. அந்த தேச துரோகிகள் இறைச்சி சாப்பிடுகிறார்கள்.
மாணவ, மாணவியர் இரவு 8 மணிக்கு மேல் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் நிர்வாணமாக நடனம் ஆடுகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட 3 ஆயிரம் ஆணுறைகளை தினமும் பார்க்க முடிகிறது என்றார்.
இதையடுத்து மக்கள் கியான்தேவை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் ட்வீட் செய்ததால் #BJPCountsCondoms(ஆணுறைகளை எண்ணும் பாஜக) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.
கியான்தேவின் கருத்தால் பாஜக தலைவர் அமித் ஷா கோபம் அடைந்துள்ளார். உடனே டெல்லிக்கு கிளம்பி வந்து விளக்கம் அளிக்குமாறு அவர் கியான்தேவுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications