பட்ஜெட் கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை...நாடாளுமன்ற தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் மசேதா தவிர கருப்பு பண பதுக்கல் தடுப்பு உள்ளிட்ட 25 மசேதாக்கள் நிறைவேற்றி மத்திய அரசு சாதனை புாிந்துள்ளது. இதையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
2015 - 16-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு அமர்வாக நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது

நேற்று கருப்பு பண மேசாதா நிறைவேற்றம்
லோக்சபாவில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த கருப்புப் பண தடுப்பு மசோதா நிறைவேறியதையடுத்து,ராஜ்யசபாவில் நேற்று விவதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ராம்ஜெத்மலானி காட்டம்
விவாதத்தின் போது பேசிய °முத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராம்ஜெத்மலானி, இந்த மசோதா ஒரு உதவாக்ககரை மசோதா என்று கடுமையாக சாடினாா்.
குற்ற வழக்கு
இதையடுத்து கருப்பு பணம் தடுப்பு மசோதா ஒரு வழியாக நிறைவேறியது. இனி கருப்புப் பணம் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் குற்ற வழக்கு தொடர இந்த மசோதாவில் இடமளிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தண்டணை
கருப்புப் பணம் பதுக்குவோருக்கு 10 ஆண்டு சிறை, அரசு அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்வோருக்கு 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதம், தொடர்ந்து மறைப்பவர்களுக்கு 30 சதவீத வரி மற்றும் 90 சதவீத அபராதம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
நில மசோதாவுக்கு "நோ" சொல்லிய காங்
இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நில கையகப்படுத்தல் மசோதா காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.
ராஜ்நாத் சிங் பெருமிதம்
கூட்டத்தொடா் முடிந்ததும் பேட்டியளித்த உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பட்ஜெட் கூட்டத்தொடா் சிறப்பாக நடைபெற்றதாக கூறினாா்.கருப்பு பண பதுக்கல் தடுப்பு உள்ளிட்ட 25 மசேதாக்கள் நிறைவேற்றி மத்திய அரசு சாதனை புாிந்துள்ளதாகவும் அவா் தொிவித்தா்.












Click it and Unblock the Notifications