கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதாக நூதன மோசடி! பெங்களூருவில் 5 பேர் கைது
பெங்களூரு: கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதாக கூறி, பணம் பறித்த மோசடி கும்பலை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவை சேர்ந்த ரவிகிரண் என்பவரை சமீபத்தில் புதுச்சேரியை சேர்ந்த ராஜன் மற்றும் வேலூரை சேர்ந்த ஜெயகுமார் ஆகியோர் அணுகி, தங்களிடம் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் இருப்பதாகவும், அதை வெள்ளையாக மாற்ற உதவும் படியும் கேட்டுள்ளனர்.

அவர்கள் கூறிய ஐடியா இதுதான்: கருப்பு பணத்தை சிறு சிறு டிரஸ்டுகளில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறோம். அந்த டிரஸ்டுக்கு நாங்கள் அளிக்கும் பணத்தில் 75 சதவீதத்தை எங்களுக்கே திருப்பி தாருங்கள். 15 சதவீதத்தை அந்த டிரஸ்டுக்கும், 10 சதவீதத்தை தரகர் கமிஷனாக நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுத்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக தயாரித்த சில போலி ஆவணங்களையும் ரவிகிரணிடம் காண்பித்துள்ளனர். பணத்தை தர வேண்டும் என்றால், சில பிராசசிங் வேலைகள் உள்ளன. அதற்கு தேவைப்படும் செலவீனங்களை நீங்கள் தர வேண்டும் என்று ரவிகிரணிடம் இவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ரவிகிரண், பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை பரிசீலித்த குற்றப்பிரிவு போலீசார், குற்றவாளிகளை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர். அவர்கள் கொடுத்த யோசனைப்படி ஜெயநகரிலுள்ள பவித்ரா என்ற என்ற ஹோட்டலுக்கு கருப்பு பண பார்ட்டிகளை வரச்சொன்னார் ரவிகிரண். இதை நம்பி ராஜன், ஜெயகுமார் மற்றும் கூட்டாளிகளான ஆந்திராவை சேர்ந்த அல்டாப், சீனிவாஸ் மற்றும் ஸ்ரீநிவாசலு ஆகியோரும் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.
அங்கு மறைந்திருந்த குற்றப்பிரிவு போலீசார் கருப்பு பண போலிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஏற்கனவே இந்த கும்பல் சென்னை மற்றும் பெங்களூருவில் சிலரிடம் பிராசசிங் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications