வெளிநாட்டில் கருப்பு பணம் பதுக்கியோர் பெயர் விரைவில் வெளியீடு- மோடி
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியவர் பெயர்களை விரைவில் வெளியிடப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமது இல்லத்தில் அமைச்சர்களுக்கு விருந்தளித்தார். அப்போது அமைச்சர்களிடம் பேசிய பிரதமர் மோடி, வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் சிலரது பெயரை வெளியிடலாம் என்றார்.

லோக்சபா தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது. இதில் முட்டுக்கட்டை நீடித்து வருவதால் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக மோடி அரசை விமர்சித்து வருகின்றன.
கடந்த வாரம் கூட நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்த விஷயத்தில் பாஜக இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் கருப்புப் பணத்தை பதுக்கியோர் பெயரை வெளியிடலாம் என்று பிரதமர் மோடி தமது அமைச்சரவை சகாக்களிடம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த பெயர்கள் வெளியாகும்போது காங்கிரஸ் பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகும் என்று அமைச்சர் அருண் ஜேட்லியும் கூறியுள்ளார்.
ஆமா எப்பதான் பட்டியல் வரும் சார்?
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications