ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்க… ரகசிய ஆலோசனை நடத்திய 6 பேர் கைது.. மும்பையில் பரபரப்பு
மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைப்பது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மும்பை ரயில் நிலையத்தில் 6 பேர் சந்தேகத்திற்கு இடமாக வெடிகுண்டு பற்றி நேற்று இரவு 6 பேர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த பயணி ஒருவர் ரயில்வே போலீசிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட போலீசார் 6 பேரையும் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட 6 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர், மேலும், மேற்கொண்ட விசாரணைக்கு வாஷி அரசு ரயில்வே போலீசிடம் 6 பேரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அச்சப்படும் வகையில் ஒன்றும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications