லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டி: மாயாவதி

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, எப்போது தேர்தல் வந்தாலும் சில ஊடகங்கள் என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்புவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. ஆனால் அவை உண்மை அல்ல.
டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசு இல்லங்களை வைத்திருக்கின்றன. நாங்கள் கன்சிராம் நினைவாக வைத்திருக்கிறோம். தேர்தலின் போதெல்லாம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதையே சமாஜ்வாடியும் பாஜகவும் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
காங்கிரஸும் பாஜகவும் மக்களை அதிருப்தியில் தள்ளிவிட்டிருக்கின்றன. நிச்சயமாக இவை இரண்டுக்குமான மாற்று இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். சில பாஜக தலைவர்கள் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டுகின்றனர். அப்படி தங்களை தாங்களே முன்னிறுத்திக் கொள்பவர்களால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியுமா?
பாஜகவில் மோடி, அத்வானி, ராஜ்நாத் இடையேயான போட்டியால் பகுஜன் சமாஜ் கட்சிக்குத்தான் லாபம். லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தேபோட்டியிடும் என்றார்.












Click it and Unblock the Notifications