காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா.. தமிழகம் தொடர்ந்த வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் செப். 2ல் விசாரணை
டெல்லி: நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை உரிய காலத்தில் திறந்து விடக் கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரித் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் திறக்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்பது தமிழக மனு கோரிக்கை.

இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்துத் திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பிரதிநிதிகள் நேற்று பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, தண்ணீர் திறக்க கோரிக்கைவிடுத்தனர். எங்களுக்கே தண்ணீர் இல்லாத நிலையில் உங்களுக்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என சித்தராமையா கூறி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம், தமிழகம் தாக்கல் செய்த இடைக்கால மனு அடுத்த வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அப்போது காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிடுமா என்பது தெரியும்.












Click it and Unblock the Notifications