For Daily Alerts
Just In
கர்நாடகாவை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்... தமிழக அரசு பதில் மனு
டெல்லி: கர்நாடகாவின் செயல்பாட்டை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஏற்கனவே கர்நாடகா அரசு மனுத் தாக்கல் செய்துவிட்டது.
இந்நிலையில், இன்று தமிழக அரசு கர்நாடகா அரசின் மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி தண்ணீரை பெற காவிரி மேலாண்மை வாரியம் உடனே தேவை. பல்வேறு நீர்த்திட்டங்களை கர்நாடகா அரசு தன்னிச்சையாக செயல்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. கர்நாடகாவின் செயல்பாட்டை கண்காணிக்க, முறையிட காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்' என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
In supreme court, the Tamilnadu government has said that to monitor Cauvery water sharing, the Cauvery management board is must.
Story first published: Thursday, April 17, 2014, 13:10 [IST]