சிபிஐ கூண்டு கிளியும் அல்ல- காங்கிரஸின் அங்கமும் அல்ல: ப.சிதம்பரம்
டெல்லி: சிபிஐ அமைப்பு என்பது கூண்டு கிளியும் அல்ல ... காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமும் அல்ல என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், சிபிஐ ஒரு கூண்டு கிளி போல இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் விமர்சித்திருந்தது. இந்த விமர்சனத்தை நிராகரிக்கும் வகையில் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மாநாட்டில் ப.சிதம்பரம் இன்று பேசினார்.
டெல்லி மாநாட்டில் பேசிய ப.சிதம்பரம், உலக அளவிலான விசாரணை அமைப்புகள் சிபிஐதான் சிறப்பாக செயபடுகிறது. ஊழல் மற்றும் குற்றங்களை ஒழிக்க பொது செயல்திட்டங்கள் அவசியமானது. சில நேரங்களில் சிபிஐ முட்டுக்கட்டுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

பொருளாதார குற்றங்கள் இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. சிபிஐ அமைப்பை கூண்டு கிளி என்று சொல்வதிலோ அல்லது காங்கிரஸின் ஒரு அங்கம் என்று சொல்வதிலே உண்மை எதுவும் இல்லை என்றார்.
சிபிஐ அமைப்பு அரசியல் சட்ட அந்தஸ்து கொண்டது அல்ல என்று அண்மையில் குவஹாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று சிபிஐ அதிகாரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்த அமைப்பின் சட்ட அந்தஸ்தை நிலைநாட்டுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications