கேள்வித்தாள் வெளியான விவகாரம்... 2 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சிபிஎஸ்இ!
2 பாடங்களுக்கு சிபிஎஸ்இ மறுதேர்வு அறிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: +2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதப்பாட கேள்வித் தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த 2 பாடங்களுக்கும் சிபிஎஸ்இ மறுதேர்வு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் +2 பொருளாதார பாடப்பிரிவுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த கேள்வித்தாள் வெளியானதாக புகார் எழுந்தது ஆனால் சிபிஎஸ்இ இதனை மறுத்து வந்தது.

இதே போன்று இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு கணித பாடத் தேர்வுக்கான கேள்வித் தாள் நேற்று இரவே வெளியானது. இன்று தேர்வு நடந்து முடிந்த நிலையில் அந்த வினாத்தாளை நேற்று இரவு வெளியான கேள்வித்தாளுடன் ஒப்பிட்டு பார்த்த போது இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சிபிஎஸ்இ +2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் மற்றும் ஆசிரியர் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர். இந்த 2 பாடப்பிரிவுகள் மட்டுமின்றி 10ம் வகுப்பு சமூக அறிவியல், 12ம் வகுப்பு பயாலஜி பாடப்பிரிவுகளுக்கான கேள்வித் தாளும் முன்கூட்டியே வெளியானதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
CBSE ஓஎஸ்எம் போர்ட்டல் ஹேக்கிங் சர்ச்சை: சோதனைத் தளம் மட்டுமே பாதிக்கப்பட்டது.. சிபிஎஸ்இ விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications