பள்ளி வாகனங்களில் சிசிடிவி , ஜிபிஎஸ் கருவி கட்டாயம்: சிபிஎஸ்இ புது உத்தரவு
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும். என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கட்டாயமாக சிசிடிவி கேமரா , ஜிபிஎஸ் கருவிகள் இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் உள்ள ஜன்னல்களை திரை சீலை, கருப்பு கண்ணாடியால் மூடக்கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி வாகனத்தில் ஒரு கண்காணிப்பு மேலாளர் இருக்க வேண்டும் என்றும் அதில் \வெளியாட்கள் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி வாகனம்
பள்ளி வாகனம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும் . வாகனத்தின் முன் பக்கமும் , பின் பக்கமும் பள்ளி பேருந்து பேருந்து என்று எழுத வேண்டும். ஒரு வேளை வாடகை வாகனம் என்றால் பள்ளி செல்லும் வாகனம் என்று தெளிவாக எழுதி இருக்கவேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் வாகனத்தில் உள்ள ஜன்னல்களை திரை சீலை, கருப்பு கண்ணாடியால் மூடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஓட்டுநரின் தகவல்
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர் கனரக வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் வாகனத்தில் ஓட்டுநரின் பெயர், முகவரி, ஓட்டுநர் உரிம எண், பேட்ஜ் எண் , வாகன உரிமையாளரின் தொலைபேசி எண் , போக்குவரத்து துறையின் உதவி எண்கள் உள்ளிட்டவைகள் நன்றாக கண் பார்வைக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டு கருவி
ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 40 கிமீ வேகம் மட்டுமே செல்லவேண்டும். இதற்காக வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி அமைக்கவேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிசிடிவி , ஜிபிஎஸ் கருவி கட்டாயம்
பள்ளி வாகன உரிமையாளர் கட்டாயமாக வாகனத்தில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பொறுத்தவேண்டும் என சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications