சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கு: குஜராத் பெண் போலீஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டும் ரத்து!
மும்பை: சொராபுதீன் சேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்ட்டர் மூலம் படுகொலை செய்த வழக்கில் இருந்து குஜராத் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. கீதா ஜோஹாரி மீதான குற்றச்சாட்டுகளை மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் சொராபுதீன் சேக் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ ஆகியோர் கடத்தப்பட்டு போலி எண்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் சொராபுதீன் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், குஜராத்தின் பல முக்கிய தலைவர்களைக் கொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும் குஜராத் போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.

2006ம் ஆண்டில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான துள்சிராம் பிரஜாபதி குஜராத் போலீசாரால் எண்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த 3 கொலைகளிலும் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து 2010ம் ஆண்டில் அவரை சிபிஐ கைது செய்தது. ஆனால், 3 மாதத்தில் அமித்ஷா ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமித்ஷா மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 38 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்கில் அண்மையில் அமித்ஷா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, ராஜஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் விமல் பட்னி, குஜராத் மாநில காவல்துறை முன்னாள் தலைவர் பி.சி. பாண்டே ஆகியோரையும் நீதிமன்றம் விடுவித்திருந்தது.
இந்நிலையில் மற்றொரு குஜராத் காவல்துறை அதிகாரியான கீதா ஜோஹரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோசாவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. வழக்கறிஞர் சச்சின் பவார் ஆஜராகி வாதிடுகையில், ஜோஹரிக்கு எதிராக வழக்குத் தொடுக்க மகாராஷ்டிர அரசின் அனுமதி பெறப்படவில்லை. ஆகையால் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது. எனவே எங்களது வழக்கை திரும்ப பெறுவதற்கான மனுவை தாக்கல் செய்கிறோம் எனக் கூறினார். இதையடுத்து கீதா ஜோஹரிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications