சென்னை மழை: தமிழக மக்களுக்காக ரூ 66 லட்சங்களைத் திரட்டிய டோலிவுட் நடிகர்கள்
ஹைதராபாத்: கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக சுமார் 66 லட்சங்களை தெலுங்கு நடிகர்கள் திரட்டியிருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழை மக்களின் வாழ்வாதரங்களை மொத்தமாக முடக்கிப் போட்டிருக்கிறது. இந்த மழையால் சென்னை மற்றும் கடலூர் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர்கள் தங்களால் இயன்ற தொகையினை வழங்கி வருகின்றனர். இவ்வறு நடிக, நடிகையர் வழங்கிய தொகையானது சுமார் 66 லட்சங்களைத் தொட்டிருக்கிறது.

நிதி வழங்கிய தெலுங்கு நடிகர்கள் விவரம்: அல்லு அர்ஜுன் 25 லட்சம், பிரபாஸ் 15 லட்சம், மகேஷ்பாபு 10 லட்சம், ரவி தேஜா 5 லட்சம்,கல்யாண் ராம் 5 லட்சம், சாய்தரம் தேஜா 3 லட்சம், வருண் தேஜா 3 லட்சம் மற்றும் சம்பூர்ணேஷ் 50 ஆயிரம்.
தெலுங்கு நடிகர்கள் இதுவரை மொத்தம் 66 லட்சத்து 50 ஆயிரங்களை சென்னை மற்றும் தமிழக மக்களுக்காக அளிக்க முன்வந்திருக்கின்றனர்.
இது தவிர இன்று மாலை நானி, அல்லரி நரேஷ் உள்ளிட்ட 10 பிரபல நடிகர்கள் பிரபல மால்களில் உண்டியல் ஏந்தி நிதி திரட்டி வருகின்றனர். மேலும் தமிழக மக்களுக்கு உதவ நினைப்போர் ராமாநாயுடு அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த தொகைகளை அனுப்பி உதவுமாறு நடிகர் ராணா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இவற்றைத் தவிர மக்களுக்குத் தேவைப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர் நவ்தீப் தலைமையில் திரட்டி சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications