சத்தீஸ்கரில் வெற்றிகரமாக நடந்த சட்டசபை தேர்தல்.. வேட்டையாடும் மாவோயிஸ்டுகள்-பழங்குடி இளைஞர் படுகொலை!
பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்டுகள் விடுத்த அழைப்பை பொதுமக்கள் நிராகரித்ததால் அரசுடன் இணைந்து செயல்பட்டதாக ஒரு பழங்குடி இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 46 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 46 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நவம்பர் 7-ந் தேதியும் 2-வது கட்டமாக இதர தொகுதிகளில் நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகள் வேண்டுகோள். இதற்கான போஸ்டர்கள், பேனர்களையும் மாவோயிஸ்டுகள் ஒட்டி இருந்தனர். இதனை மீறி தேர்தல் நடத்தப்பட்டது. சட்டசபை தேர்தலின் போது மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். எல்லை பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்தது. இதனை மீறி சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் வன்முறைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே சட்டசபை தேர்தல் பணிகளில் அரசுடன் இணைந்து செயல்பட்டதாக பழங்குடி இளைஞர் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் மாவோயிஸ்டுகள். முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நாராயண்பூர் மாவட்டத்தில் பழங்குடி இளைஞரை சுட்டுப் படுகொலை செய்து சடலம் அருகே துண்டு பிரசுரங்களையும் வீசி இருக்கின்றனர் மாவோயிஸ்டுகள்.
இது தொடர்பாக சத்தீஸ்கர் போலீசார் கூறுகையில், மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவரது நடமாட்டம் பஸ்தார் பிராந்தியத்தில் அதிகரித்திருப்பதாக தகவல் கிடைத்தது. மாவோயிஸ்டுகள் தங்களது நீதிமன்றம் ஒன்றைக் கூட்டி இத்தகைய தண்டனை விதிப்பது வழக்கம். அதனையே தற்போதும் செய்துள்ளனர் என்றனர். மாவோயிஸ்டுகளின் இந்த வெறிச்செயல் பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications