சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை.. பாதுகாப்பு படையினர் 3 பேர் பலி! 14 பேர் படுகாயம்
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சில மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் காணப்படுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையின் போது அவ்வபோது பாதுகாப்பு படையினருக்கும் மவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடப்பதையும் காண முடிகிறது.

அந்த வகையில், சத்தீஸ்கரில் உள்ள பிஜாபூர்- சுக்மா எல்லையை ஒட்டிய பகுதியில் மவோய்ஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. தெகல்குடேன் என்ற கிராமத்தில் நக்சல் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிக்காக பாதுகாப்பு முகாம் அமைக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த முகாம் அமைக்கும் பணி முடிந்த நிலையில், CoBRA/STF/DRG என்ற பிரிவு பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாத மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த வீரர்கள் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது என்கவுண்டர் நடைபெற்ற இதே இடத்தில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நண்டைபெற்றது. இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் கொல்லபப்ட்டனர். 33 பேர் காயம் அடைந்தனர்.
பலியான வீரர்களின் உடலை மீட்க மட்டும் 2 நாட்கள் பாதுகாப்பு படையினருக்கு தேவைப்பட்டது. தற்போது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்த 59 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஜூலை மற்றும் டிசம்பர் மாத கால கட்டத்தில் 173 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications