சத்தீஸ்கரின் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு.. பாஜக மேலிடம் அறிவிப்பு.. யார் இவர் தெரியுமா?
சென்னை: சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபரா வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலோடு ஒப்பிடுகையில் கையில் இருந்த 33 இடங்களை காங்கிரஸ் இழந்துள்ளது.
அதேபோல் பாஜக புதிதாக 39 இடங்களை கூடுதலாக பெற்றுள்ளது. கடந்த 2018 சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 61,36,429 (43.0%), பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 47,01,530 (33.0%). ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜேசிசி) 5 இடங்களில் வெற்றி பெற்றது. வாக்குகள் 10,81,760 (7.6%) , பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது வாக்குகள் 5,51,687 (3.9%).
தலைகீழ் மாற்றம்: தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இது தலைகீழாக மாறி, மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.

இன்று கூட்டம்: சத்தீஸ்கரின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கி நடந்தது. ராய்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கூட்டம் நடந்தது.. ஏற்கனவே எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரே முதல்வர் ஆவார்.. வெளியே இருந்து ஒருவர் வந்து முதல்வர் ஆகி.. அதன்பிறகு இடைத்தேர்தலை சந்தித்து எம்எல்ஏ ஆக வாய்ப்பு இல்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2000ம் ஆண்டு அம்மாநிலத்தின் முதல் முதல்வர் அஜித் ஜோகியும் (காங்கிரஸ்), 2வது முதல்வர் டாக்டர் ராமன் சிங்கும் (பாஜக) முதல்வராக பதவியேற்று, இடைத்தேர்தலுக்கு பின் எம்.எல்.ஏ., ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. . பாஜக ஆட்சிக்கு வந்தபோது ராமன் எம்எல்ஏவாக இருக்கவில்லை. இதுவரை சத்தீஸ்கரில் மூன்று தலைவர்கள் முதல்வர் நாற்காலியை எட்டியுள்ளனர். இதில், இருவர் இடைத்தேர்தல் மூலம் வென்று முதல்வர் இருக்கைக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும், கடந்த முறை 2018 தேர்தலில், இந்த பாரம்பரியத்தை முதல்வர் பூபேஷ் பாகேல் உடைத்தார். பதான் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்வரானார்.
பாஜக கூட்டம்: அதேபோல் இந்த முறையும் ஏற்கனவே எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரே முதல்வர் ஆவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூன்று பார்வையாளர்கள் - மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் சர்பானந்தா சோனோவால் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ராமன் சிங், ராம்விச்சார் நேதம், சரோஜ் பாண்டே, அருண் சாவ், ஓ.பி.சௌத்ரி, மற்றும் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் சத்தீஸ்கரில் முதல்வர் பதவிக்கு முன்னணியில் உள்ளனர். 2003 முதல் 2018 வரை மூன்று முறை முதல்வராக இருந்த ராமன் சிங்கை தேர்வு செய்யாவிட்டால், பாஜக ஓபிசி அல்லது பழங்குடியின முதல்வர் ஒருவரை தேர்வு செய்யும் என்று ஊகிக்கப்பட்டது. இந்நிலையில் தான் விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.
#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/PtAOM52JKa
— ANI (@ANI) December 10, 2023
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் விஷ்ணு தியோ சாய் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் சத்தீஸ்கரில் ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். தற்போது குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் முதல்வராகி உள்ளார்.
முன்னதாக ராய்கார் தொகுதியில் 4 முறை எம்பியாகவும் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் எஃகு, கனிமம் தொழிலாளர் மற்று வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சராக செயல்பட்டார். மேலும்2020 முதல் 2022ம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டார். இவர் தலைமையில் பாஜக வளர்ச்சி பெற்றது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications