Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.95 கோடி !

Subscribe to Oneindia Tamil

மும்பை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது சொத்து மதிப்பு ரூ.95 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஜூன் 29ம் தேதியோடு காலாவதியாக உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

 Chidambaram And His Family Have Assets Worth Rs 95 Crore

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.95 கோடி என அவர் தெரிவித்துள்ளார்.

சொத்துப்பட்டியல் தொடர்பான 22 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ப.சிதம்பரம் ஒப்படைத்தார். அதில், தனது குடும்பத்திற்கு அசையும் சொத்துக்களாக ரூ.54.30 கோடியும், அசையா சொத்தாக ரூ.41.35 கோடியும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2014-15ம் ஆண்டில் தனக்கு ரூ.8.58 கோடி வருமானம் வந்துள்ளதாகவும், தனது மனைவி நளினி சிதம்பரத்திற்கு ரூ.1.25 கோடி வருமானம் வந்துள்ளதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் கையிருப்பில் ரூ.3.50 லட்சம் ரொக்கமும், தனது மனைவி நளினியிடம் ரூ.1.24 லட்சமும் உள்ளதாகவும், தனது பெயரில் டெல்லி, கர்நாடகா, சென்னை ஆகிய நகரங்களில் 13 வங்கிக் கணக்குகளும், மனைவி நளினியின் பெயரில் 6 வங்கிக் கணக்குகளும் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசையும் சொத்துக்கள் பட்டியலில் தன்னிடம் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரமும், தனது மனைவி நளினியிடம் 1.43 கிலோ தங்கமும் (மதிப்பு ரூ.39.17 லட்சம்). ரூ.20.46 லட்சம் மதிப்பிலான 52 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.22.98 லட்சம் மதிப்பிலான 76.61 கேரட் வைரமும் உள்ளதாக சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

1994இல் கர்நாடகாவில் ரூ.25.16 லட்சம் மதிப்பில் வாங்கிய 38.72 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.93 கோடி எனவும் தன்னிடம் சொந்தமாக ஹோண்டா மற்றும் ஸ்கோடா கார் உள்ளதாகவும், மனைவி நளினியிடம் இன்னோவா கார் உள்ளதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

தான் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்றும், நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்றும் ஆவணத்தில் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், தனக்கு முகநூல் கணக்கு இல்லையென்றும், ஆனால் ட்விட்டர் கணக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+