பிரதமர் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்: ப. சிதம்பரம் "திடீர்" குரல்
டெல்லி: பிரதமர் பதவிக்கான வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தால், பிரதமராக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை கட்சி தெரிவிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

தற்போதைய காலகட்டத்தில், மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் கூட, யார் உங்கள் தலைவர் என்றுதான் கட்சியினரிடம் மக்கள் கேட்கின்றனர்.
பல மாநில சட்டசபை தேர்தல்களில், முதல்வர் வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இதுதான் தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றார்.
லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து பாஜக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியோ இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் உள்ளது. வரும் 17ந் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் திடீரென ப. சிதம்பரம் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்க கோரி இருப்பது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications