பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கு குற்றவாளியின் சொத்தில் பங்கு உண்டு: அலகாபாத் நீதிமன்றம் அதிரடி!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: பலாத்காரத்தில் பிறந்த குழந்தைக்கும், குற்றவாளியின் பரம்பரை சொத்தில் பங்கு பெற முழு உரிமை உள்ளது என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பலாத்காரத்திற்கு பிறக்கும் குழந்தைகளின் உரிமை தொடர்பான வழக்கு விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஷாபியுல் ஹஸ்நென், டி.கே. உபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று வழங்கினர். அதில் பலாத்காரத்தில் பிறந்த குழந்தையை முறைகேடான முறையில் பிறந்த குழந்தையாகக் கருதி, அதற்கும், பரம்பரை சொத்தில் உரிய பங்கினை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications