எங்க வீரரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்... கைது செய்யப்பட்ட வீரரை விடுவிக்க சீனா கோரிக்கை
ஸ்ரீநகர்: இந்தியப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த சீன வீரரைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று சீன ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது
இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு பாதுகாப்புப் படைக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக எல்லையில் இரு நாடுகளும் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி நுழைந்த சீன வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக இந்திய ராணும் நேற்று அறிவித்தது. லடாக் பாங்சாங் ஏரியின் தெற்கே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இது குறித்து சீன ராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா கூறியிருந்தது.
இந்நிலையில் சீன ராணுவத்தின் செய்தி நிறுவனமான பி.எல்.ஏ. டெய்லி இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெள்ளிக்கிழமை எல்லைப் பகுதியில் பணியிலிருந்த சீன வீரர் ஒருவர் காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து இந்திய ராணுவம் காணாமல்போன சீன வீரரைக் கண்டுபிடித்ததாக தங்களுக்குப் பதில் அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் அறிவுறுத்தல்களின்படி சீன வீரர் திருப்பி அளிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்றும் இந்திய கூறியதாக பி.எல்.ஏ. டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த வீரரை இந்திய அதிகாரிகள் உடனடியாக சீனாவிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்றும் எல்லைப் பகுதியில் அமைதியை இரு நாடுகளும் கூட்டாகப் பராமரிக்க வேண்டும் என்றும் பி.எல்.ஏ. டெய்லியில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு ஜூலை மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல சீன ராணுவத்தைச் சேர்ந்த 43 பேரும் இதில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இது எல்லையில் நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications