லடாக் எல்லையில் குவிக்கப்படும் படை.. மோதலுக்கு காரணமே சீனாதான்.. இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு!
லடாக்: லடாக் எல்லையில் கடந்த ஒரு வருடமாக நடக்கும் எல்லை மோதலுக்கு சீனாவின் அத்துமீறலும், படை குவிப்பும்தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த வருடம் மே மாதத்தில் இருந்தே லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் கல்வானில் மிக பெரிதாக வெடித்தது.
கல்வான் மோதலுக்கு பின் இரண்டு தரப்பும் எல்லையில் படைகளையும், ஆயுதங்களையும் குவித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் எல்லையில் இரண்டு தரப்பும் குறிப்பிட்ட அளவு படைகளை பின்வாங்கிக்கொள்ள முடிவு செய்தன.

பாங்காங்
முக்கியமாக பாங்காங் திசோவில் பல்வேறு கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து சீனா மற்றும் இந்திய படைகள் பின்வாங்கின. ஆனால் தற்போது மீண்டும் எல்லையில் சீனா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் எஸ் 400 ரக ஆயுதங்களை எல்லையில் சீனா குவித்து வருகிறது. வான் ரீதியான மோதலுக்கு தயாராகும் வகையில் சீனா இப்படி செய்கிறது.

கிழக்கு
தற்போது கிழக்கு லடாக்கில் இந்திய எல்லை அருகே சீனா படைகளை குவிப்பதையும், கட்டுமானங்களை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தையை மீறி சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. எல்லையில் இப்படி படைகளை குவிப்பது பாதுகாப்பு கருதிதான் என்று சீனாவின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

விளக்கம்
பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து எல்லையை காக்க வேண்டும் என்றுதான் படைகளை குவிக்கிறோம். இது சாதாரண விஷயம்தான் என்று சீனா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சீனாவின் ஆக்கிரமிப்புகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அதில், லடாக் ஈல்லையில் நடக்கும் மோதலுக்கு சீனாதான் காரணம்.

காரணம்
கிழக்கு லடாக் பகுதியில் சீனா அதிக அளவில் படைகளை குவித்ததும், கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்ய முயற்சி செய்ததும்தான் எல்லையில் நிலவும் மோதலுக்கு காரணம். சினோ - இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக சீனா செயல்படுகிறது. சீனாவின் இந்த செயல்பாடுகள் அமைதியை குலைக்கும் வகையில் உள்ளன.

ஒப்பந்தம்
1993 மற்றும் 1996ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிரானது இது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனா ஒப்பந்தங்களின் அடிப்படையில் படைகளை குவிக்க வேண்டும். குறைந்த அளவில் மட்டுமே சீனா படைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் சீனா அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது. பேச்சுவார்த்தைகளை சீனா மதித்து நடக்க வேண்டும் என்று, இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications