For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று லடாக்.. நாளை காஷ்மீர்.. எல்லைக்கு "திடீரென" செல்லும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது?

லடாக் எல்லையில் இருக்கும் லே பகுதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல இருக்கிறார்.

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் எல்லையில் இருக்கும் லே பகுதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல இருக்கிறார்.

Recommended Video

    The Motive Behind Rajnath Singh's Ladakh Visit | India China Border Fight | Oneindia Tamil

    இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துள்ளது. எல்லையில் பல்வேறு இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியுள்ளது.

    முக்கியமாக லடாக்கில் இருக்கும் கல்வான், டெப்சாங், ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியாவும் முக்கியம்.. சீனாவும் முக்கியம்.. திடீரென டிரம்ப் எடுத்த முடிவு.. என்ன சொன்னார்? இந்தியாவும் முக்கியம்.. சீனாவும் முக்கியம்.. திடீரென டிரம்ப் எடுத்த முடிவு.. என்ன சொன்னார்?

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    எல்லையில் இதன் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற்றது. முக்கியமாக பாங்காங் திசோ பகுதியில் பிங்கர் பகுதி இரண்டு மற்றும் மூன்றில் இருந்து சீனா படைகளை வாபஸ் பெற்றது. கல்வான் பகுதியில் இருந்தும் சீனா இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு படைகளை வாபஸ் பெற்றது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் தணிந்து வந்தது.

    தணிந்த பதற்றம்

    தணிந்த பதற்றம்

    இதற்காக அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக அஜித் தோவல் தரப்பில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின் லெப்டினன்ட் கர்னல் தரப்பில் இன்னொரு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் இன்னும் எல்லையில் பாங்காங் திசோவில் பிங்கர் எண் 4ல் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்காமல் இருக்கிறது. அங்கு சீனாவின் படைகள் இப்போதும் உள்ளது.

    சீனாவின் படைகள்

    சீனாவின் படைகள்

    அங்கு சீனாவின் படைகள் தொடர்ந்து முகாமிட்டு வரும் நிலையில்தான் லடாக் எல்லையில் இருக்கும் லே பகுதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல இருக்கிறார். எல்லையில் இருக்கும் நிலவரத்தை அவரை சோதனை செய்ய இருக்கிறார். ராஜ்நாத் சிங் உடன் முப்படை தளபதி பிபின் ராவத் உடன் செல்கிறார்.

    வேறு யார்

    வேறு யார்

    அதேபோல் ராணுவ தளபதி நரவானே உடன் செல்கிறார். எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது. சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிவிட்டதா என்று ஆலோசனைகளை மேற்கொள்ள செல்கிறார்கள். எல்லையில் நிலைமை சரியாகிவிட்டதா என்பதை சோதனை செய்ய இவர்கள் எல்லைக்கு செல்கிறார்கள். இன்று லடாக் செல்லும் ராஜ்நாத் சிங் நாளை காஷ்மீர் செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China standoff with India: Rajnath Singh goes to Leh border today with CDC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X