For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

20 இந்திய வீரர்களின் வீர மரணம்.. களமிறங்கிய அமெரிக்கா.. இந்தியா - சீனா சண்டை பற்றி அதிரடி கருத்து!

Google Oneindia Tamil News

லடாக்: இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்து வரும் சண்டை குறித்து அமெரிக்கா முதல்முறையாக கருத்து தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் இரவு நடந்த சண்டை குறித்து அமெரிக்கா மௌனம் கலைத்து உள்ளது.

Recommended Video

    நாட்டுக்காக உயிரிழந்தது பெருமை... தமிழக வீரரின் தாய் உருக்கம்!

    இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    அதேபோல் சீனாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கு போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது.

     நேரு காலத்தில் இருந்தே.. முதுகில் குத்துவது முழுநேர வேலை.. மாமல்லபுரம் நட்பை கேலிக்கூத்தாக்கிய சீனா நேரு காலத்தில் இருந்தே.. முதுகில் குத்துவது முழுநேர வேலை.. மாமல்லபுரம் நட்பை கேலிக்கூத்தாக்கிய சீனா

    அமெரிக்கா ஆர்வம்

    அமெரிக்கா ஆர்வம்

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதலில் அமெரிக்கா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. முக்கியமாக இதில் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டுகிறார். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதாவது எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம்.

    என்ன சமாதானம்

    என்ன சமாதானம்

    இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து, மத்தியசம் பேச தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இந்த சமாதான பேச்சை இந்தியா மறுத்துவிட்டது. அதேபோல் சீனாவும் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தை அழைப்பிற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

    அமெரிக்கா கருத்து

    அமெரிக்கா கருத்து

    இந்த நிலையில் இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்து வரும் சண்டை குறித்து அமெரிக்கா முதல்முறையாக கருத்து தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் இரவு நடந்த சண்டை குறித்து அமெரிக்கா மௌனம் கலைத்து உள்ளது. அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மென்ட் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் நடக்கும் சண்டையை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    அதிக கவனம்

    அதிக கவனம்

    இந்தியா சீனா இடையிலான மோதலில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்த செய்தி கேட்டறிந்தோம். இதற்காக வருந்துகிறோம். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சண்டையை எப்படியாவது அமைதியாக இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

    அமைதி முக்கியம்

    அமைதி முக்கியம்

    இரண்டு நாடுகளும் இந்த பிரச்னையை தீர்க்க முடிவு செய்துள்ளது. விரைவில் அமைதியாக படைகளை வாபஸ் வாங்கி, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஜூன் 2ம் தேதிதான் போனில் பேசினார்கள். இந்தியா - சீனா மோதல் குறித்து இவர்கள் இருவரும் பேசினார்கள். அதில் இருந்து லடாக் எல்லை பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    China standoff with India: the US gives statement on the violence in Ladakh yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X