உயிர் கொல்லி கொரோனா வைரஸுக்கு மத்தியில் மலர்ந்த காதல்.. சீன பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்
Recommended Video
போபால்: கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் சீன நாட்டு பெண்ணை காதலித்து இந்திய இளைஞர் ஒருவர் கரம் பிடித்துள்ளார்.
சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் என்ற வைரஸ் நோய் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நோய் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 25 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த நோய்க்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நோய் தீவிரம் அடைந்தால் உயிர் பலி ஏற்படுவது அபாயம் என்பதால் இந்த வைரஸ் நோயை உயிர் கொல்லி என்றும் கூறுகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.

இளைஞர்
இதுவரை சீனாவில் கொரோனா வைரஸுக்கு 425 பேர் பலியாகிவிட்டனர். சீனாவில் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் மற்ற நாடுகளில் இருந்து சென்றுள்ளோர் அவசர அவசரமாக சீனாவை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. அந்த நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சீன பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்
மத்திய பிரதேசத்தை சேர்நதவர் சத்யார்த் மிஸ்ரா. இவர் கனடா நாட்டில் படிக்கும் போது இவருக்கும் சீனாவை சேர்ந்த ஜிஹாவோ வாங்கிற்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோரிடம் தங்கள் காதலை கூறி திருமணம் செய்ய முடிவு முடிவு செய்துள்ளதாக கூறினர். இதையடுத்து ஜிஹாவோ வாங், அவரது தந்தை சிபோ வாங், தாய் ஜின் குவான் உள்ளிட்டோர் மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சார் நகருக்கு வந்தனர்.

இந்திய முறை
அவர்களுக்கு அந்த மாநில சுகாதாரத் துறை மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து நேற்று முன் தினம் மாண்ட்சாரில் சத்யார்த் மிஸ்ராவுக்கும் ஜிஹாவோ வாங்கிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்திய முறைப்படி ஜிஹாவோவிற்கு தாலி கட்டினார்.

கொரோனா வைரஸ்
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில் நாங்கள் இருவரும் கனடாவில் ஒரு கல்லூரியில் சந்தித்தோம். 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்டோம். எனது திருமணத்திற்கு இன்னும் 4 உறவினர்கள் வரவிருந்தனர். ஆனால் கொரோனாவினால் விசா பிரச்சினை இருந்ததால் அவர்களால் வர இயலவில்லை என்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications