ஆட்சியில் இருப்பது பாஜகதான்.. ஆனால் இடைத்தேர்தலில் கொடி நாட்டும் காங்கிரஸ்! உத்தரகாண்ட்டில் சம்பவம்
டேராடூன்: 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதேபோல 20 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இவ்விரு கட்சிகள் தவிர பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 தொகுதியும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி பத்ரிநாத் மற்றும் மங்களூரு என இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

பத்ரிநாத்: இந்த தொகுதியில் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தொகுதியின் தன்மையை பொறுத்தவரை, ஒருமுறை பாஜகவும், அடுத்த முறை காங்கிரசுக்கும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். 2002ம் ஆண்டு காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது. இதனை தொடர்ந்து 2007ல் பாஜகவும், 2012ல் காங்கிரசும், 2017ல் பாஜகவும், 2022ல் காங்கிரசும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படி இருக்கையில், 2012 மற்றும் 2022ல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த தேர்தலில் 49.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
மங்களூர்: இந்த தொகுதியிலும் 2002லிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சிதான் வென்றிருக்கிறது. நடுவில் இரண்டு முறை மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த சார்வாட் கரீம் அன்சாரி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால், 2012 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2022 தேர்தலிலும் பகுஜன் சமாஜ் சார்பில் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 68.24 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று இரண்டு தொகுதியிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிற்பகல் நிலவரப்படி இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள்தான் முன்னிலையில் இருக்கின்றனர். தாங்கள் ஆளும் மாநிலத்தில் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications