வாக்கு சாவடி அருகே மோடி பிரச்சாரம் செய்வதா... தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க காங்., திட்டம்
அகமதபாத்: வாக்கு சாவடிக்கு அருகே,செய்தியாளர்களை சந்தித்தது தேர்தல் நடத்தை விதிக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்தில் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். அப்போது, வெளியில் காத்திருந்த பாஜகவினர், மோடி, மோடி என உற்சாக முழக்கமிட்டனர். வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வந்த பிரதமர் மோடி, வாக்களித்ததன் அடையாளமாக மை வைத்த விரலை உயர்த்திக்காட்டினார்.

பின்னர், மை விரலை உயர்த்திக் காட்டியபடி நடந்தும், வாகனத்திலும் சென்றார். அப்போது, இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர், ஆரவார முழக்கம் எழுப்பி பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெடிகுண்டுவை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என தெரிவித்தார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்த மோடி, கும்பமேளாவில் புனித நீராடிய பின்னர் கிடைக்கும் புனித தன்மையை, ஜனநாயக திருவிழாவான தேர்தலில் வாக்களித்த பின்னர் ஒருவரால் அனுபவிக்க முடியும் என தெரிவித்தார்.
தீவிரவாதத்துக்கு ஆயுதம் வெடிகுண்டு என்றும், ஜனநாயகத்துக்கு பலம் வாக்குகள் என்றும் மோடி தெரிவித்தார். வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நமது வாக்குகளின் பலத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என வாக்காளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
தேர்தல் நடத்தை விதிகளையும் மீறி, பிரச்சாரத்தில் ஈடுபடுவது போல் மோடி பேசியிருப்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், இன்று மாலை தேர்தலை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications