கட்சி நிதி கணக்கு: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்த காங்கிரஸ்- ஆதரித்த அதிமுக
டெல்லி: அரசியல் கட்சிகள் பெறும் கட்சி நிதி குறித்த முழு விபரங்களையும் வெளிப்படையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக பெறும் நிதியை கணக்கில் வைத்து அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கூறிய பரிந்துரையை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
தேர்தலை வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதில், தேர்தலுக்குப் பெறும் நிதியை கணக்கு வைத்து தேர்தல் ஆணையத்திடம் ஆண்டு தோறும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.
முன்னதாக தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் முக்கிய கட்சியான பாஜக இன்னும் தனது கருத்தை தெரிவிக்காமல் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications