அம்பேத்கரை பலமுறை அவமதித்த காங்கிரஸ்.. மறக்க முடியாத அரசியல் வரலாறு! நடந்தது என்ன?
சென்னை: இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலராக காங்கிரஸ் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் வேளையில், அக்கட்சியின் வரலாறு அதற்கு நேர்மாறாக உள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை ஓரங்கட்டியது முதல், நெருக்கடி நிலையின்போது ஜனநாயக அமைப்புகளை நசுக்கியது வரை, இந்திய தேசிய காங்கிரஸ் (INC) இந்திய அரசியலமைப்பின் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பை மீண்டும் மீண்டும் அவமதித்துள்ளது.
அம்பேத்கரின் மீதான காங்கிரஸின் கூற்று ஏன் தவறானது?
இந்திய அரசியலமைப்பின் முக்கிய சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், காங்கிரஸ் தலைவர்களால் ஒருபோதும் மதிக்கப்படவில்லை. அவரது தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் தொடர்ந்து அதை குறைமதிப்பிற்கு உட்படுத்தினர்.

இந்த அவமதிப்பு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. அம்பேத்கரின் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் தனிப்பட்ட புறக்கணிப்புகள் மூலம் இது வெளிப்பட்டது. அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதாகக் கூறுவது நகைப்புக்குரியது. ஏனெனில், அவரது வாழ்நாள் முழுவதும் அவரை அக்கட்சி எதிர்த்தது. இன்று அவரது உருவத்தை உயர்த்திப் பிடிக்கும் அதே கட்சி, ஒரு காலத்தில் அவரை அதிகாரத்திலிருந்து விலக்கி வைத்து, அவரது குரலை அடக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தது.
1930ஆம் ஆண்டில், லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் தலித்துகளுக்காக பேச அம்பேத்கர் சென்றபோது, காங்கிரஸ் அதைப் புறக்கணித்தது. தலித்துகளுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க தனி தொகுதியை அவர் கோரியபோது, "தலித்துகள் உட்பட அனைத்து இந்தியர்களுக்காகவும் தாங்கள் மட்டுமே பேசுவதாக" மகாத்மா காந்தியும், காங்கிரசும் கடுமையாக எதிர்த்தனர்.
அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை பல்வேறு தடைகளைச் சந்தித்தது. அரசியல் சாசன சபைக்குள் நுழைவதற்கும் காங்கிரஸ் தடையாக இருந்தது. வங்காளம் மற்றும் முஸ்லீம் லீக்கின் ஆதரவால் மட்டுமே அவர் உள்ளே வந்தார். நாடு பிரிந்த பிறகு, அவருக்கு ஒரு புதிய இடம் தேவைப்பட்டபோது, அரசியலமைப்பை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கு காரணமாக காங்கிரஸ் அவரை பம்பாயிலிருந்து தேர்ந்தெடுத்தது.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்து சட்ட மசோதா போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். இதன் மூலம் பெண்களின் உரிமைகளை மேம்படுத்த முடியும். ஆனால் காங்கிரஸ்தான் அதற்கு ஆதரவு தர மறுத்துவிட்டது. ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்த அம்பேத்கர் 1951ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த தேர்தல்களிலேயே, அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது. நேருவே அவரைத் தோற்கடிக்க பிரச்சாரம் செய்தார். 1952, 1954 ஆகிய தேர்தல்களில் அம்பேத்கர் தோல்வியடைந்தார்.
அவர் 1956-ல் காலமானபோது, காங்கிரஸ் அரசு அவரது உடலுக்கு அதிகாரப்பூர்வ போக்குவரத்து வசதியைக் கூட செய்து தரவில்லை. தேசிய மரியாதையோ, பாரத ரத்னா விருதோ, ஏன் ஒரு நினைவிடத்தைக் கூட கட்டவில்லை. பொதுமக்களின் போராட்டத்திற்குப் பிறகே அவரது படம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.
இன்று அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறும் காங்கிரஸ், ஒரு காலத்தில் அவரை எதிர்த்தது, ஓரங்கட்டியது, அவமதித்தது. அவர்கள் இப்போது கொண்டாடுவது அவருடைய கொள்கைகளுக்காக அல்ல. இது அரசியல் ஆதாயத்திற்காகச் செய்யும் நாடகம்.

நெருக்கடி நிலை: இந்திய ஜனநாயகத்தின் கறுப்புப் பக்கம்
ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரான ஒரு நிகழ்வு என்றால், அது இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் 1975 ஜூன் 25 அன்று கொண்டு வந்த நெருக்கடி நிலைதான். 21 மாத காலம் அதிகாரத்தின் தவறான பயன்பாட்டிற்கு ஒரு பாடமாக அமைந்தது.
குடிமை உரிமைகள் பறிப்பு: அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன. வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையான ஆட்கொணர்வு மனு இடைநிறுத்தப்பட்டது. நீதித்துறை கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன.
எதிர்க்கட்சிகள் சிறையில்: அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் அதிகமான அரசியல் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். குடும்பங்கள் சிதைந்தன, நாடு முழுவதும் ஒருவித பயம் சூழ்ந்தது.
கட்டாய கருத்தடை: சஞ்சய் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் கட்டாய கருத்தடை செய்யப்பட்டனர். இது மனித உரிமைகளின் மீறலாகும்.
அரசியலமைப்பு திருத்தப்பட்டது: நெருக்கடி நிலையின்போது, 42வது திருத்தம் ஒரு "அரசியலமைப்பு சதி" என்று அழைக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் அரசியலமைப்பின் முன்னுரையில் "சமதர்ம" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகளைச் சேர்த்தது காங்கிரஸ். இது அரசியலமைப்பின் தன்மையையே மாற்றியது. இந்த திருத்தம் கொள்கைகளை உயர்த்துவதற்காகச் செய்யப்படவில்லை. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகச் செய்யப்பட்டது.
அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை காங்கிரஸ் அவமதித்தது
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. சமூக நீதிக்கு உதட்டளவில் ஆதரவு தெரிவித்துவிட்டு, விளிம்பு நிலையில் இருந்தவர்களை தொடர்ந்து விளிம்பிலேயே வைத்திருந்தது. அம்பேத்கரின் கட்சியான பட்டியல் சாதிகள் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. மாறாக, அவர் தேர்தல் அரசியலில் ஓரங்கட்டப்படுவதை உறுதி செய்தது. வற்புறுத்தலின் பேரில் மதமாற்றம் செய்வதை அம்பேத்கர் எதிர்த்தார். குறிப்பாக இந்திய கலாச்சார விழுமியங்களுடன் ஒன்றாத மதங்களுக்கு மாறுவதை எச்சரித்தார். காங்கிரஸ் இந்த கவலைகளைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக வகுப்புவாதத்தை ஊக்குவித்தது.
பாரதிய ஜனதா கட்சி சொன்னதைச் செய்தது
பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெறும் வார்த்தைகளால் இல்லாமல், கொள்கை மற்றும் முயற்சிகள் மூலம் அவரது பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறது. அம்பேத்கரின் நினைவிடங்கள், அரசியலமைப்பு தின அங்கீகாரம் மற்றும் டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் ஆகியவை பாஜகவின் அர்ப்பணிப்புக்கு சான்றுகளாக உள்ளன.
ஸ்டார்ட்-அப் இந்தியா, முத்ரா யோஜனா மற்றும் EWS இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நேரடியாகப் பயனளித்துள்ளன. சமூக நீதிக்கான அம்பேத்கரின் கனவை நனவாக்கியுள்ளன.
ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டது முதல், பல அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் வரை விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு பாஜக உயரிய பதவிகளை வழங்கியுள்ளது.
காங்கிரஸின் இரட்டை வேடம்
நெருக்கடி நிலைக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபேல் கேட்டபோது, காங்கிரஸின் கடந்த கால நடவடிக்கைகள் மீண்டும் விவாதத்திற்கு வந்தன. சுதந்திரத்தை கட்டுப்படுத்திய அதே கட்சி இப்போது அரசியலமைப்பை ஒரு அடையாளமாக பயன்படுத்துகிறது என்று பலர் கருதுகின்றனர். கடினமான காலங்களில் அதன் மதிப்புகளை யார் பாதுகாத்தது என்பதே முக்கியம். நெருக்கடி நிலையின்போது காங்கிரஸ் நடந்துகொண்ட விதத்தையும், அம்பேத்கரை நடத்திய விதத்தையும் ஒப்புக்கொண்டு சரி செய்வது, பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு முக்கியமானதாக இருக்கலாம்.
-
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications