பாஜகவுக்கு ‛செக்’.. லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கூட்டணி இதுதான்.. வாய்விட்ட மல்லிகார்ஜூன கார்கே!
சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் 3 நாள் மாநாடு நடந்து வருகிறது.
ராய்ப்பூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணி எப்படி அமையும் என்பது பற்றிய முக்கிய விஷயத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இந்த முக்கிய தகவலை சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் 3 நாள் மாநாடு தொடங்கிய நிலையில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜகவிடம், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி துவக்கிவிட்டது.

2024 லோக்சபா தேர்தல் முக்கியம்
இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக பாஜகவின் எழுச்சி மற்றும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. ஒரு காலத்தில் முழு இந்தியாவையும் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் தற்போது விரல்விட்டு எண்ணும் வகையில் சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. சில மாநிலங்களில் ஆளும் கட்சியுடன் கூட்டணி என்ற பெயரில் தொற்றி கொண்டுள்ளது. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பாயிண்டாக உள்ளது.

காங்கிரஸ் மாநாடு
இந்நிலையில் தான் மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தோடு சிறப்பு மாநாடு சத்தீஸ்காரில் துவங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாடு சத்தீஸ்கார் மாநிலம் ராய்பூரில் நடந்து வருகிறது. இது காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடாகும்.

கடும் நெருக்கடி
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛2024ம் ஆண்டில் சத்தீஸ்காருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் இங்கு காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு இங்கு நடக்கிறது. பெரிய சவால் நிறைந்த அதேநேரத்தில் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ள இந்த நேரத்தில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசிலமைப்பின்படி செயல்பட வேண்டிய அமைப்புகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. சீனா உடனான எல்லை பாதுகாப்பில் பிரச்சனை உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மையும் உச்சம் தொட்டி உள்ளது.

கூட்டணியில் யார் யார்?
இந்த இக்கட்டான சூழலில் நாட்டை மீட்டெடுக்கும் வகையில் திறமையான மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட தலைமையை காங்கிரஸால் மட்டுமே வழங்க முடியும். கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக செயல்பட்டு வந்தது. அதேபோன்ற கூட்டணியை மீண்டும் மத்தியில் அமைக்க நாம் முயற்சிக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு எதிரான பாஜக அரசை வீழ்த்த வேண்டும். இதற்காக நம்மை போன்று ஒத்த சித்தாந்தம், கொள்கை கொண்டு பாஜகவை எதிர்ப்போருடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

தியாகங்கள் செய்ய..
2024ம் ஆண்டுக்கான சத்தீஸ்கார் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் நலன் கருதி எத்தகைய தியாகங்களை செய்யவும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு டெல்லியில் இருந்து கொண்டு ஜனநாயகம், ,அரசியலமைப்பை உடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைளை முடக்குகிறது. பிரதமர் மோடி தனது நண்பர்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறார். இதனை கட்டுப்படுத்த நாம் தீவிரமாக செயல்பட வேண்டும்'' என்றார்.

சுதந்திரமாக செயல்பட...
இதனால் கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும். அதோடு கட்சியின் செயற்குழுவில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தலைவராக நான் உங்களை சுதந்திரமாக செயல்படவும் கூட்டாக முடிவெடுக்கவும் வலியுறுத்துகிறேன். எந்த முடிவை எடுத்தாலும் அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவாக இருக்க வேண்டும்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications