டெல்லியில் சீன தூதருடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சீனா தூதருடன் ராகுல் காந்தி சந்தித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள சீன தூதருடன் ராகுல்காந்தி நேற்று சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ராகுல் காந்தி வட்டாரத்தில் கூறுகையில், ராகுல்காந்தியும், சீன தூதரும் சந்திப்பது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் பல முறை சந்தித்துள்ளனர்.

இருவரும் நல்ல நண்பர்கள் என்பதுதான் சந்திப்புக்கு காரணம். இவ்வாறு ராகுல் காந்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனா மற்றும் இந்தியா சிக்கிம் எல்லையில் மோதிக்கொண்டுள்ளது. இந்த நிலையில், ராகுல்காந்தியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சீன விவகாரத்தில் மோடி மவுனமாக இருப்பதாகவும், மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி 2 தினங்கள் முன்பு டிவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications