சத்தீஸ்கர் மாநிலத்தில் எகிறி அடிக்கும் காங்கிரஸ்.. பாஜக நிலை ரொம்ப பாவம்.. வெளியான புது சர்வே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்க எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த புது சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 7 மற்றும் 17 என்று இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் டிச. 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கே பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கே ஆட்சியைப் பிடிப்பதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி: இதற்கிடையே சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக மனோரமா நியூஸ்- விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் மாநிலத்தைத் தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைச் சற்று இழந்தாலும் ஆட்சியைத் தக்க வைக்க போதுமான இடங்களைக் காங்கிரஸ் வெல்லும் என்று இந்த சர்வே கூறியிருக்கிறது.
சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது 1.94% குறையும். அதாவது கடந்த தேர்தலில் 43.04% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் இந்த முறை 41.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் என்று இந்த சர்வே கூறியுள்ளது. இதனால் கடந்த தேர்தலில் 68 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் இந்த முறை 53-58 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் பெறும் இடங்கள் குறைந்தாலும் கூட அது தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைக் காட்டிலும் குறையவில்லை. இதனால் வரும் தேர்தலில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே இந்த சர்வே கூறியுள்ளது.
பாஜக கஷ்டம்: அங்கு இப்போது எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கடந்த 2018 தேர்தலில் 32.97% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த முறை அது 4% அதிகரித்து 36.8 சதவீதமாக உயரும் என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக 28-34 இடங்களை சத்தீஸ்கரில் கைப்பற்றும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக சத்தீஸ்கரில் 15 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகள் கடந்த 2018இல் ஏழு இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை அவர்கள் வெல்லும் இடங்கள் 4ஆக குறையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்கள்: சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை அது பாஜகவின் கோட்டையாகவே பல ஆண்டுகள் இருந்தது. கடந்த 2018இல் அங்கே காங்கிரஸ் வெல்வதற்கு முன்பு தொடர்ந்து மூன்று முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 2003, 2008 மற்றும் 2013 என மூன்று தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக வென்றது. அதில் பாஜக முறையே 50, 50 மற்றும் 49 இடங்களைப் பெற்றது. மறுபுறம் இதே ஆண்டுகளில் காங்கிரஸ் 37, 38 மற்றும் 39 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications