ஏற்கனவே காற்று மாசால் திணறும் டெல்லி.. சரமாரியாக வெடிகளை கொளுத்திபோட்ட காங்கிரஸ் தொண்டர்கள்!
ஏற்கனவே காற்று மாசால் சிக்கி திணறும் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக வெடிகளை கொளுத்தி போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: ஏற்கனவே காற்று மாசால் சிக்கி திணறும் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக வெடிகளை கொளுத்தி போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றார். ராகுல் காந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
விழாவில் ராகுல் காந்தி, 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சான்றிதழை பெற்ற ராகுல்
ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும் நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.

விண்ணை பிளந்த வெடி சத்தம்
ராகுல்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டதும், அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியர் சரமாரியாக வெடிகளை கொளுத்தினர். பெரிய பெரிய பெட்டிகளில் வரிசையாக கொளுத்தப்பட்ட வெடியால் சத்தம் விண்ணை பிளந்தது.

சத்தத்தால் தவித்த சோனியா
வெடிகள் வெடிக்கப்பட்டதால் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. காதை கிழித்த வெடிச்சத்ததால் பேச முடியால் தவித்தார் சோனியா காந்தி.

பொறுமையிழந்த சோனியா
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர், வெடி சத்தத்தால் தன்னால் உரக்க பேசமுடியவில்லை என்றார். சற்றுநேரம் பேச்சை நிறுத்திய அவர், வெடி வெடிப்பதை நிறுத்தும்படி கூறினார்.

ஏற்கனவே காற்று மாசு
இதையடுத்து வெடி சத்தம் நின்றப்பிறகு மீண்டும் பேச்சை தொடர்ந்தார் சோனியா காந்தி. ஏற்கனவே காற்று மாசால் திணறுகிறது தலைநகர் டெல்லி.

தீபாவளிக்குக்குகூட தடை
காற்று மாசு ஆபத்து கட்டத்தை தாண்டியதால் வாகனங்கள் இயக்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. தீபாவளி பண்டிகைக்கு கூட வெடிகளை வெடிக்க கூடாது என தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.

பட்டாசுகளால் பெரும் சர்ச்சை
இந்நிலையில் ஒட்டு மொத்த வெடியையும் இன்று ஒரே நாளில் வெடித்து தீர்த்துவிட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள். ஏற்கனவே காற்றுமாசால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காற்றுமாசால் திணறும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் தன்பாட்டுக்கு வெடிகளை கொளுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications