மாலை சூடும் மண நாள்... சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று கல்யாணம்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிரியங்கா செளத்ரி திருமணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பக்காவாக தயாராகி விட்டன.
டெல்லியில் உள்ள லீலா பாலஸ் ஹோட்டலில் வைத்து இவர்களது திருமணம் நடைபெறுகிறது.

அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுத்துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி திருமணத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் திருமணத்திற்கு வரவுள்ளனர்.
இருப்பினும் விராத் கோஹ்லி, அவரது காதலி அனுஷ்கா சர்மா ஆகியோர் வருவார்களா என்பது தெரியவில்லை. வந்தாலும் ஜோடியாக வருவார்களா அல்லது தனித் தனியாக வருவார்களா என்பதும் தெரியவில்லை.
பிரியங்கா, ரெய்னாவின் பால்ய கால தோழி ஆவார். தற்போது நெதர்லாந்தில் ஒரு வங்கியில் பணியாற்றஇ வருகிறார்.
திருமணத்திற்குப் பின்னர் வேலையை விட்டு விடுவார் பிரியங்கா என்று தெரிகிறது. அதந் பிந்னர் தனது கணவருடன் இல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடவுள்ளாராம்.
பிரியங்கா குறித்து வெளிப்படையாக பேச மறுக்கிறார் ரெய்னா. வெறும் புன்னகை மட்டுமே. அதிகபட்சமாக அவர் உதிர்த்த வார்த்தை அவர் ஒரு ஸ்வீட் கேர்ள் என்பது மட்டுமே.












Click it and Unblock the Notifications