காஷ்மீரில் சிஆர்பிஎப் துப்பாக்கிச் சூடு- பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: காஷ்மீரின்ப த்காம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிஆர்பிஎப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சாவு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கடந்த மாதம் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று சிஆர்பிஎப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியுதாகவும், பதிலுக்கு சிஆர்பிஎப் படையினர் சுட்டதில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று, 10ம் வகுப்பு மாணவரான யாசிர் சலாம் ஸ்ரீநகரில் உள்ள படமலோ யார்டு பகுதி அருகே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது இறப்பிற்கு போலீசார்தான் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதே நாளில், ஸ்ரீநகரில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் அதிகாரி பிரமோத் குமார் பலியானார். போராட்டக்காரர்கள் சிபிஆர்எப் நிலைகள் மீது நடத்திய தொடர் தாக்குதலில் 9 படை வீர்ர்களும், போலீசார் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்டு 13ம் தேதி நடைபெற்ற கல்வீச்சில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 வயது இளைஞர் அஷ்பக் அகமது பட் என்பவரும் சுதந்திர தினத்தன்று உயிரிழந்தார்.
காஷ்மீரில் தொடர்ந்து 39 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தும் சாவு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சுதந்திர தினத்தன்று மட்டும் நடைபெற்ற பல்வேறு சண்டைகளில் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜுலை 9ம் முதல் சிஆர்பிஎப், போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் கண்களை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications