ஆருஷி கொலை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
டெல்லி: நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஆருஷி கொலை வழக்கில் நாளை மறுநாள் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
பல் மருத்துவ தம்பதிகளான ராஜேஷ் தல்வார்- நூபுர் ஆகியோரின் 14 வயது மகள் ஆருஷி. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஆருஷி தமது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அந்த வீட்டு மாடியில் வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, சந்தேகத்தின் பேரில் முதலில் ராஜேஷ் தல்வாரை கைது செய்தது. பின்னர் ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தியது. இவ்வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அப்போது ஆருஷியின் பெற்றோர்தான் அவரையும் வேலைக்காரர் ஹேம்ராஜையும் கொலை செய்தனர் என்றும் அவர்கள் எப்படியெல்லாம் கொலை செய்தனர் என்றும் சிபிஐ தரப்பி விவரமாக சாட்சியம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications