தாவூத் பதுங்கியிருக்கும் இடமே எங்களுக்குத் தெரியாது: மத்திய அரசு அந்தர்பல்டி!!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதல் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் எங்கே பதுங்கி இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் இந்திய உளவுத்துறை கண்காணிப்பில் இருந்து அவர் தப்பிவிட்டதாகவும் லோக்சபாவில் உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தான் தாவூத் பதுங்கி இருப்பதாக கூறிவந்த மத்திய அரசு திடீரென அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்று அறிவித்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மும்பையில் 1993ஆம் ஆண்டு மார்ச் 12ந் தேதியன்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்தியாவை விட்டு தப்பி ஓடி பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் இந்தியாவிடம் சரணடைய விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே எப்படியும் தாவூத் இப்ராஹிமை இந்தியா கொண்டுவந்துவிடுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்புடன் தாவூத் பதுங்கியிருப்பதாகவும் மத்திய அரசு கூறிவந்தது. இந்த நிலையில் லோக்சபாவில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருக்கும் இடம் தெரியவில்லை. தாவூத் தற்போது இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இல்லை.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிப்பித்துள்ளது. தாவூத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதுவரை பாகிஸ்தானில்தான் தாவூத் பதுங்கியிருப்பதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில் அந்தர்பல்டியாக தாவூத் இருப்பிடமே தெரியாது என கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications