தாவூத் பதுங்கியிருக்கும் இடமே எங்களுக்குத் தெரியாது: மத்திய அரசு அந்தர்பல்டி!!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதல் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் எங்கே பதுங்கி இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் இந்திய உளவுத்துறை கண்காணிப்பில் இருந்து அவர் தப்பிவிட்டதாகவும் லோக்சபாவில் உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தான் தாவூத் பதுங்கி இருப்பதாக கூறிவந்த மத்திய அரசு திடீரென அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்று அறிவித்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மும்பையில் 1993ஆம் ஆண்டு மார்ச் 12ந் தேதியன்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்தியாவை விட்டு தப்பி ஓடி பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் இந்தியாவிடம் சரணடைய விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே எப்படியும் தாவூத் இப்ராஹிமை இந்தியா கொண்டுவந்துவிடுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்புடன் தாவூத் பதுங்கியிருப்பதாகவும் மத்திய அரசு கூறிவந்தது. இந்த நிலையில் லோக்சபாவில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருக்கும் இடம் தெரியவில்லை. தாவூத் தற்போது இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இல்லை.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிப்பித்துள்ளது. தாவூத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதுவரை பாகிஸ்தானில்தான் தாவூத் பதுங்கியிருப்பதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில் அந்தர்பல்டியாக தாவூத் இருப்பிடமே தெரியாது என கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications