மேதி பிஸ்வாஸ் கைது... பெங்களூர் போலீசுக்கு டுவிட்டரில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்
பெங்களூரு: பெங்களூருவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவாக ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற இளைஞர் கைது செய்யப் பட்டிருப்பதற்கு அந்த இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு டுவிட்டர் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு எம்.என்.சி. நிறுவனம் ஒன்றில் மேதி பிஸ்வாஸ் என்ற பொறியியல் பட்டதாரி, டுவிட்டர் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் வேலை பார்த்து வந்ததாக பிரிட்டன் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் மேதியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேதியை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு குற்றப்பிரிவு இணை ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் மற்றும் துணை ஆணையர் அபிஷேக் கோயலுக்கு டுவிட்டரில் ஒரு மிரட்டல் செய்தி அனுப்பப் பட்டுள்ளது. அதில், ‘எங்கள் சகோதரரை உங்களிடம் விட முடியாது. பழிக்கு பழி செயல் விரைவில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கான விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த மிரட்டல் பதிவைத் தொடர்ந்து பெங்களூரு போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications