Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷா அன்று சந்தித்தாரே சாமியார்.. இன்று மீண்டும் மத்திய அரசுக்கு புது கோரிக்கை.. கெடு விதிப்பு

உபி மடாதிபதி புதுவித கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஜலசமாதி அடைந்துவிடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நிறைய மடங்கள் உள்ளன.. இந்த மடங்களில் மடாதிபதிகளும் உள்ளனர்.. இந்த மடாதிபதிகளை உபி மக்கள் மிகவும் மதித்து போற்றி வருகின்றனர்.. இவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் மிகுந்த சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்..

அதனால்தான், கொரோனா தொற்று 2வது அலையின்போது கும்பமேளாவை நிறுத்த எத்தனையோ முயற்சிகளை அந்த மாநிலம் மேற்கொண்டது.. ஆனால், மடாதிபதிகளை மீறி எதுவுமே செய்ய முடியாமல் போனது.. விளைவு அங்கு தொற்றும் அதிகமானது என்பது வேறு கதை.

 அறிவிப்பு

அறிவிப்பு

இந்நிலையில்தான், அங்குள்ள மடாதிபதிகளில் மிக முக்கியமானவராக கருதப்படும் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் என்பவர் புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில், இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக எச்சரித்துள்ளார்.. இதற்காக அவர். அயோத்தியின் ராம் ஜானகி கோவிலின் முன்பு உட்கார்ந்து இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

பேட்டி

பேட்டி

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அதாவது இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்... அப்படி இல்லாவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன்... பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அமித்ஷா

அமித்ஷா

இப்படி இவர் எச்சரிப்பது முதல் தடவையில்லை.. ஏற்கனவே இதே கோரிக்கையை வைத்துதான் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.. பிறகு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்தார்.. அப்போதுதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை நேரில் சந்தித்தார்.. அதற்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.. இப்போது மறுபடியும் எச்சரித்து, கெடு விதித்துள்ளார்.

சாமியார்

சாமியார்

3 வருடங்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தினார்.. அப்போதுதான் இவர் ஓரளவு பிரபலமானார்.. இதற்கு இதன்மூலம், சற்று பிரபலமான இந்த சாமியார் கடந்த ஆண்டு மறுபடியும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.. இப்போது மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

உத்தரப்பிரதேசத்துக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.. இந்த முறையாவது உபியை கைப்பற்ற காங்கிரஸ் முயன்று வருகிறது.. இந்த முறையும் உபியை விட்டுவிடக்கூடாது என்று பாஜக முயன்று வருகிறது. இப்படி பிரதான கட்சிகள் படுபிஸியில் இயங்கி கொண்டிருக்கும்போது, ஜீயர் தந்த இந்த பரபரப்பு பேட்டி முக்கியத்துவம் பெற்று வருகிறது.. காரணம், உபி தேர்தலில் மடாதிபதிகளின் ஆதரவும் கட்சிக்கு முக்கியம் என்று கருதப்படுகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+