டெல்லி பலாத்கார வழக்கு தீர்ப்பை விமர்சித்த குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு சிக்கல்!
Subscribe to Oneindia Tamil

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 2 குற்றவாளிகளின் வழக்கறிஞரான ஏ.பி.சிங், தீர்ப்பு விசாரணை மற்றும் உண்மைகளின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. ரசியல் நெருக்கடியின் காரணமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று விமர்சித்திருந்தார்.
வழக்கறிஞர் ஏ.பி. சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லி பார் கவுன்சிலிலும் புகார் செய்யப்பட்டது. வரும் 29-ந் தேதி டெல்லி பார் கவுன்சில் இந்த விவகாரம் பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறது.












Click it and Unblock the Notifications