For Daily Alerts
Just In
சோனியா மருமகன் வதேரா மீதான நில மோசடி வழக்கு- மே 13க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில மோசடி வழக்கை மே 13-ந் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஏராளமான நில மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மே 12-ந் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைகிறது. அதுவரை விசாரணையை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து வதேரா மீதான வழக்கின் விசாரணையை மே 13-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
English summary
The Delhi High Court has fixed May 13 as the next date for hearing in the alleged land deals of the Congress president's son-in-law Robert Vadra. A plea demanding inquiry against Robert Vadra alleging his corrupt land deals came up for a hearing before the Delhi High Court on Wednesday.
Story first published: Wednesday, April 30, 2014, 12:02 [IST]