டெல்லியில் சுதந்திரன தின டைவர்ஷனால் 50 வயது நபர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலி
டெல்லி: சுதந்திர தின்தையொட்டி வேறு பாதையில் வாகனங்களை திருப்பிவிட்டதால் டெல்லியில் 50 வயது நபர் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் கைலாஷ் சந்திரா(50). அவருக்கு நேற்று காலை 7.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரின் வீட்டில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேடி இர்வின் மருத்துவமனைக்கு அவரை ஆட்டோவில் அழைத்து சென்றனர்.
அவரை அவரது மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சுதந்திர தினம்
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் பல சாலைகளில் செல்லும் வாகனங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்படுகின்றன. இந்த காரணத்தால் 10 நிமிடத்தில் செல்ல வேண்டிய மருத்துவமனைக்கு ஊரெல்லாம் சுற்றி செல்வதற்குள் கைலாஷ் மரணம் அடைந்தார்.

ஒன்றரை மணிநேரம்
எங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு 10 நிமிடத்தில் சென்றுவிடலாம். ஆனால் வேறு வழியாக செல்ல வேண்டியதால் மருத்துவமனையை அடைய ஒன்றரை மணிநேரம் ஆகிவிட்டது என்று கைலாஷின் மகன் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

போலீஸ்
என் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். தயவு செய்து இந்த பாதையில் செல்ல அனுமதியுங்கள் என்று போலீசாரிடம் கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை என்கிறார் அரவிந்த்.

22 கிலோமீட்டர்
6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு 22 கிலோமீட்டர் சுற்றவிட்டனர். ஒரு அரை மணிநேரம் முன்பாக சென்றிருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறி அரவிந்த் அழுகிறார்.












Click it and Unblock the Notifications