டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அறைகள், கழிவறைகளை ஜோடிகளுக்கு வாடகைக்கு விடும் ஊழியர்கள்
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளிகள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பது குறித்த தகவல் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த சேனலின் செய்தியாளர் மெட்ரோ ரயில் நிலைத்திற்கு சென்று துப்புரவுத் தொழிலாளி ஒருவரிடம் தானும், தனுத பெண் நண்பரும் நேரம் செலவிட ஒரு அறை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர் ரூ.500 கேட்டுள்ளார். ரூ.300 முதல் ரூ.500 வரை அளித்தால் ஜோடிகள் தனிமையில் ஒரு மணிநேரம் இருக்க அனுமதிக்கப்படுகிறார்களாம்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி அனுஜ் தயால் கூறுகையில்,
தொலைக்காட்சி சேனலில் வெளியான விவகாரம் குறித்த சிடி எங்கள் நிறுவனத்தின் தலைமை பாதுாப்பு கமிஷனிரடம் அளிக்கப்பட்டுள்ளது. யாராவது தவறு செய்தது உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி மெட்ரோ ரயில் நிலைய கழிவறைகள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது என்றார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோ லீக்காகி அது ஆபாச பட இணையதளத்தில் வெளியானது. லீக்கான சிசிடிவி வீடியோவை 1.5 லட்சம் பேர் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.