குழந்தைகளை கொன்று சடலத்துடன் உறவு.. டெல்லியில் கைதான காமக்கொடூரன் வாக்குமூலம்
டெல்லி: 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்று சடலங்களுடன் உடலுறவு வைத்திருந்த விவகாரம் குற்றவாளி ரவிந்தர் குமார் கொடுத்த வாக்குமூலத்தால், தற்போது அம்பலமாகியுள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியான பேகும்பூரை சேர்ந்த 23 வயது ரவிந்தர் குமார், 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வன்புணர்வு கொண்டதற்காகவும், கொலை செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியாகும். அவன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலமும், ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியும், நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து ரவிந்தர் குமார் கூறியுள்ளதாவது: காணாமல் போன பெண் குழந்தையொன்றே போலீசார் தேடி விசாரணை நடத்தியபோதுதான் நான் மாட்டிக்கொண்டேன். நான் பஸ் கிளீனராக வேலை பார்த்தேன். அப்போது, சிறுவர், சிறுமிகளை, சாக்லேட் காண்பித்து ஆசை காட்டி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்வேன். அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், கொலை செய்து உறவு கொள்வேன்.
2008 முதல் 2015 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில், 15 குழந்தைகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளேன். எதிர்த்த ஒரு 6 வயது சிறுவனுக்கு, மயக்கமருந்தை அதிகம் கொடுத்தும், அவன் சாகவில்லை. எனவே, அவனது தலையை அடித்து உடைத்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து, பிறகு உறவு வைத்தேன்.
ஆபாச வெப்சைட்டுகள், ஆபாச படங்கள் போன்றவற்றை பார்த்ததாலும், நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதாலும் இந்த எண்ணம் எனக்கு வந்தது. குடிபோதை தெளிந்ததும், நான் செய்தது தவறோ என்று நினைப்பேன். ஆனால் மறுபடி குடிக்கும்போது மீண்டும், சிறுவர், சிறுமிகள் மீதே நாட்டம்போகும். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.
பேட்டியெடுத்த நிருபர், "உங்கள் குழந்தையை யாராவது இப்படி செய்தால் அப்போது அதை ஏற்பீர்களா" என்று கேட்டதற்கு, "அப்படி யாராவது செய்தால், அவனை தூக்கில் போட வேண்டும் என்றுதான் நான் கோரிக்கைவிடுப்பேன்" என்று அக்காமக்கொடூரன் கூறியுள்ளான்.
உளவியல் நிபுணர்கள் இதுபற்றி கூறுகையில், குழந்தைகள் மீதான ஈர்ப்பு கொண்ட (paedophilia) நோயால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது போல தெரியவில்லை. மாறாக, பிணங்களுடன் உறவு கொள்ளும் (necrophilia) மனநல நோயால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. சிறு வயதில் சமூகத்தில் ஒடுக்கப்படும் சிலர், பெரியவர்களானதும், சிறுவர், சிறுமிகளை டார்கெட் செய்கிறார்கள்.
சடலம்தான் எந்த எதிர்ப்பும் காட்டாது. எனவே, சடலத்துடன் உறவு கொள்ளும்போது, தான் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதாகவும், தனக்கு எதிர்ப்பு காட்ட யாரும் இல்லை என்பது போலவும் அந்த நோயாளிகள் மனது நினைக்கும். இதுதான் இதுபோன்ற கிரைம்களுக்கு காரணம். நோய் அறிகுறி தெரிவோர்கள் உடனடியாக மனநல சிகிச்சை பெறுவது அவசியம் என்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications