Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகளை கொன்று சடலத்துடன் உறவு.. டெல்லியில் கைதான காமக்கொடூரன் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்று சடலங்களுடன் உடலுறவு வைத்திருந்த விவகாரம் குற்றவாளி ரவிந்தர் குமார் கொடுத்த வாக்குமூலத்தால், தற்போது அம்பலமாகியுள்ளது.

டெல்லியின் புறநகர் பகுதியான பேகும்பூரை சேர்ந்த 23 வயது ரவிந்தர் குமார், 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வன்புணர்வு கொண்டதற்காகவும், கொலை செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியாகும். அவன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலமும், ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியும், நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

இதுகுறித்து ரவிந்தர் குமார் கூறியுள்ளதாவது: காணாமல் போன பெண் குழந்தையொன்றே போலீசார் தேடி விசாரணை நடத்தியபோதுதான் நான் மாட்டிக்கொண்டேன். நான் பஸ் கிளீனராக வேலை பார்த்தேன். அப்போது, சிறுவர், சிறுமிகளை, சாக்லேட் காண்பித்து ஆசை காட்டி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்வேன். அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், கொலை செய்து உறவு கொள்வேன்.

2008 முதல் 2015 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில், 15 குழந்தைகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளேன். எதிர்த்த ஒரு 6 வயது சிறுவனுக்கு, மயக்கமருந்தை அதிகம் கொடுத்தும், அவன் சாகவில்லை. எனவே, அவனது தலையை அடித்து உடைத்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து, பிறகு உறவு வைத்தேன்.

ஆபாச வெப்சைட்டுகள், ஆபாச படங்கள் போன்றவற்றை பார்த்ததாலும், நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதாலும் இந்த எண்ணம் எனக்கு வந்தது. குடிபோதை தெளிந்ததும், நான் செய்தது தவறோ என்று நினைப்பேன். ஆனால் மறுபடி குடிக்கும்போது மீண்டும், சிறுவர், சிறுமிகள் மீதே நாட்டம்போகும். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.

பேட்டியெடுத்த நிருபர், "உங்கள் குழந்தையை யாராவது இப்படி செய்தால் அப்போது அதை ஏற்பீர்களா" என்று கேட்டதற்கு, "அப்படி யாராவது செய்தால், அவனை தூக்கில் போட வேண்டும் என்றுதான் நான் கோரிக்கைவிடுப்பேன்" என்று அக்காமக்கொடூரன் கூறியுள்ளான்.

உளவியல் நிபுணர்கள் இதுபற்றி கூறுகையில், குழந்தைகள் மீதான ஈர்ப்பு கொண்ட (paedophilia) நோயால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது போல தெரியவில்லை. மாறாக, பிணங்களுடன் உறவு கொள்ளும் (necrophilia) மனநல நோயால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. சிறு வயதில் சமூகத்தில் ஒடுக்கப்படும் சிலர், பெரியவர்களானதும், சிறுவர், சிறுமிகளை டார்கெட் செய்கிறார்கள்.

சடலம்தான் எந்த எதிர்ப்பும் காட்டாது. எனவே, சடலத்துடன் உறவு கொள்ளும்போது, தான் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதாகவும், தனக்கு எதிர்ப்பு காட்ட யாரும் இல்லை என்பது போலவும் அந்த நோயாளிகள் மனது நினைக்கும். இதுதான் இதுபோன்ற கிரைம்களுக்கு காரணம். நோய் அறிகுறி தெரிவோர்கள் உடனடியாக மனநல சிகிச்சை பெறுவது அவசியம் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+