பண பிரச்சினை.. டெல்லி மார்க்கெட்டுக்கு இரவில் திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லியிலுள்ள உள்ள மார்க்கெட்டிற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு திடீர் விசிட் அடித்து வியாபாரிகள் குறைகளை கேட்டறிந்தார்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தால் பொது மக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், டெல்லி சரோஜினி மார்க்கெட் பகுதி வியாபாரிகளுடன் ராகுல் காந்தி நேற்று சிறிது நேரம் கலந்துரையாடினார்.

நேற்றிரவு 9 மணியளவில் சரோஜினி நகர் மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த ராகுல், சில்லறை பற்றாக்குறையால் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள பெரு முதலாளிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று ராகுல் காந்தி அப்போது தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications