மகளோடு "டிஜிட்டல் இந்தியா"வுக்கு ஆதரவாக களம் குதித்த டோணி!
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தனது பேஸ்புக் புரபைல் படத்தை மாற்றியுள்ளார். அதாவது டிஜிட்டல் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் படத்தைப் போட்டுள்ளார்.
மோடி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கைத் தொடர்ந்து எண்ணற்ற இந்தியர்கள் தங்களது பேஸ்புக் புரபைல் படத்தை மாற்றி வருகின்றனர். இந்த வரிசையில் டோணியும் தற்போது சேர்ந்துள்ளார்.
டோணியும், அவரது மகள் ஜிவாவும் இருக்கும் அந்தப் படம் தற்போது அவரது புரபைல் படமாக அலங்கரிக்கிறது. மூவண்ணத்திற்கு இடையே இவர்கள் இருவரும் காணப்படுகின்றனர்.

ஆரம்பித்து வைத்த மார்க்
மோடி முதலில் தனது புரபைல் படத்தை டிஜிட்டல் இந்தியா ஆதரவு பிரசாரத்திற்காக மாற்றினார். இதையடுத்து மார்க் ஜுகர்பெர்க்கும் மாற்றினார். இதனால் இது பிரபலமாகி அனைவரும் மாற்ற ஆரம்பித்தனர்.

நன்றி மார்க்
மார்க்கே படத்தை மாற்றியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன மோடி, உடனடியாக அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அனைவரும் இதேபோல மாற்றுமாறும் அவர் தனது பேஸ்புக்கில் கோரிக்கை விடுத்திருந்தார்.

டோணியும்
இந்த நிலையில் கேப்டன் டோணியும் தனது பேஸ்புக் புரபைல் படத்தை டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக மாற்றியுள்ளார்.

அக்டோபர் 31 வரை
இந்தப் படத்தை மாற்றும்போது அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகும் இதே படம் தொடர வேண்டுமா என்று கேட்கும். ஆம் என்று கொடுத்தால் அதற்குப் பிறகும் இந்தப் படமே நீடிக்கும். இல்லாவிட்டால் தானாகவே உங்களது பழைய படத்திற்கு புரபைல் படம் மாறி விடும்.












Click it and Unblock the Notifications