வீரப்பனை சுட்டதற்கு நிவாரணமா தந்தது தமிழக அரசு?... ஆந்திர அமைச்சரின் சீண்டல் பேச்சு
ஹைதராபாத்: ஆந்திர என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் அனைவரும் கடத்தல்காரர்கள் தான் என அம்மாநில வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ‘வீரப்பனைச் சுட்டுக் கொன்றதற்காக அவரது குடும்பத்தாருக்கு தமிழக அரசு ஏதும் நிவாரணம் தந்ததா...?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டியதாக கடந்த 6ம் தேதி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். தற்காப்புக்காக அவர்களைச் சுட்டதாக ஆந்திர போலீசார் விளக்கம் அளித்த போதும், இது ஏற்கனவே திட்டமிட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஆந்திரா என்கவுண்டரில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதியுதவி அளித்துள்ளது. அது தவிர அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் நிதியுதவி வழங்கியுள்ளன. இதேபோல், சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்திற்கு ஆந்திர அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் கடத்தல்காரர்கள். மரம் வெட்டுபவர்கள் அல்ல. கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது. சந்தன மரக்கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதற்கு தமிழக அரசு நிவாரணம் கொடுத்ததா? ஆந்திர வன வளங்களை கொள்ளையடிக்க வேண்டாம் என தமிழக அரசை அறிவுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications