சட்டசபை தேர்தல்கள் முடிந்த உடனேயே டீசல் விலை ரூ. 2.50 குறைய வாய்ப்பு?
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே டீசல் விலை ரூ2.50 அளவுக்கு குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 1.35 அமெரிக்க டாலர் குறைந்து ஒரு பீப்பாய் 90.76 டாலராக உள்ளது. இப்படி கச்சா எண்ணெய்யின் விலை சரிவடைந்துள்ளதால் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையின் மூலம் லிட்டருக்கு ரூ. 1.90 லாபம் கிடைத்தது.

இதனால் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தற்போது ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.
15-ந் தேதி வாக்குப் பதிவு முடிந்த கையோடு டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த 1-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைக்கப்பட்டது. வருகிற 15-ந் தேதிக்குப்பின் டீசல் விலையும் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications