2ஜி ஊழல்- ஜேபிசி அறிக்கையை நிராகரித்தது திமுக!

ஏற்கனவே இந்த அறிக்கையை பாஜக நிராகரித்துள்ள நிலையில் இந்த ஊழல் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக திமுகவினர் சிலர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி இந்த அறிக்கையை தற்போது நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு நேரில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏ.ராசா தனது தரப்பு கருத்தைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் தங்களது நிராகரிப்பையும், அதிருப்தியையும் கூட்டுக் குழுத் தலைவர் பி.சி.சாக்கோவிடம் அளித்துள்ளனர்.
அந்த கடிதத்தில், விசாரணை அறிக்கை தொடர்பாக பி.சி.சாக்கோ பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அரசியல் காரணங்களுக்காகவே ஏ.ராசா இந்த விவகாரத்தில் பலிகடாவாக்கப்பட்டார். மேலும் அவர் கூட்டுக் குழு விசாரணையின்போது நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவோ அல்லது விளக்கம் அளிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று திமுக கூறியுள்ளது.
மேலும் அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த அறிக்கை குறித்து டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில், இது அரைவேக்காட்டுத்தனமான அறிக்கை. ராசாவை விசாரிக்காமல் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு குழு வந்தது என்பதை சாக்கோ விளக்க வேண்டும்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான உண்மையான ஆவணங்களை குழு உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும் என்று திமுக கோரியிருந்தது. ஆனால் அதை சாக்கோ ஏற்கவில்லை. கேட்டால் சிபிஐ வசம் அவை இருப்பதாக பொருந்தாக் காரணங்களை அவர் கூறினார்.
அதேசமயம், இந்த ஆவணங்களின் நகல்கள் மட்டும் எப்படி சாக்கோவிடம் வந்தது என்பது தெரியவில்லை. அவர் இதற்கு விளக்கம் தர வேண்டும் என்றார் பாலு.
அறிக்கை சொல்வது என்ன...?
முன்னதாக இந்த அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 2ஜி ஏலத்தின்போது அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி தெரிவித்த கூற்றையும் இந்த விசாரணைக் குழு நிராகரித்துள்ளது. இந்த நஷ்டக் கணக்கு தவறானது என்றும் அது தெரிவித்துள்ளது.
மேலும் ஒட்டுமொத்தக் குழப்பத்துக்கும், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஏ.ராசாதான் காரணம் என்றும் திமுக மீது முழுப் பழியையும் தூக்கிப் போட்டுள்ளது கூட்டுக் குழு.
தற்போது இந்த விசாரணை அறிக்கை லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் ஒப்புதலுக்காக அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.
-
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications